பாதசாரியின் காசி



பாதசாரியின் காசி சிறுகதை வாசித்தேன். தமிழின் மிக முக்கியமான சிறுகதை. உளவியல் தளத்தில் இன்னும் சில தூரம் சென்றிருக்க வேண்டுமென்று தோன்றியது.


இதில் காசியாக வருவதும் அவனது நன்பனும் ஒரே மனிதனின் இருவேறு மனநிலைகள் ,ஆளுமைகள்.அந்த மனிதர் கதையை சொல்லும் பாதசாரிதான்.கதையில் முக்கிய தருணங்கள் பல இருந்தாலும் , பேருந்தில் செல்லும் போது ஏற்படும் வாழ்வின் ஆபூர்வ தருணம் என்ற இடம் மிக முக்கியமானது. பேருந்தில் செல்லும்போது அதுவும் மதியான நேரத்தில் (பதினொரு மணியிலிருந்து மூன்று மணிவரை) சமயங்களில் கூட்டம் குறைவாகயிருக்கும்.ஜன சந்தடியில்லாமல் நேரான சாலையில் ஓட்டுனர் சீரான வேகத்தில் , கீயர் மாற்றாமல் செலுத்தும்போது அநேகமாக பேருந்தில் யாரும் பேசுவதில்லை. சிலர் தூங்குவார்கள். அப்போது ஓட்டுனர் , பயனிகள், பேருந்து எல்லாம் சேர்ந்து ஒர் உடல் ஆகும் தருணங்கள் அமைவதுண்டு. வாழ்வின் அற்புத தருணங்கள்.

அவசியம் வாசிக்கபட வேண்டிய சிறுகதை.தமிழினி வெளியீடு.

No comments: