புத்தக கண்காட்சி




புத்தக கண்காட்சியில் எத்தனை புத்தகங்கள்.அதை முன்னிட்டு எத்தனை வெளியீடுகள். மிக சமீபத்தில் வரும் புத்தகங்களை தவிர்த்துவிடுவது நல்லது. சுடச்சுட படிப்பதற்க்கு அது ஒன்றும் செய்திதாள் அல்ல! இதில் தள்ளுபடிகள் வேறு. சில பதிப்பகங்களுக்கு என்ன நோக்கமென்று தெரியவில்லை. இந்தமுறை நான் சமகாலத்து எழுத்தாளர்கள் எழுதிய எந்த புத்தகத்தையும் வாங்கவில்லை.அசோகமித்திரன், கி.ரா., பஷூர், தஸ்தாயெவ்ஸ்கி,காம்யூ,ந.முத்துசாமி,சுந்தர ராமசாமி,பாதசாரி ஆகியோரின் புத்தகங்களைத்தான் வாங்கினேன்.இப்போது வணிக நோக்கில் வந்து குவியும் எழுத்துகளை சூழலின் பரபரப்பு காரணமாக வாங்க ஆரம்பித்தால் , பின்பு அவற்றை படித்து இருக்கும் ஆர்வத்தையும் விட்டுவிட நேரும்.


No comments: