தஸ்தாயெவ்ஸ்கியின் கிறுஸ்து




கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா.தி இடியட் நாவலில் வரும் மிஸ்கின்.
அல்யோஷாவின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.மூத்த சகோதரன் திமித்ரி தன்டனை பெறுகிறான்.அடுத்த சகோதரன் இவான் மனநிலை பாதிக்கப்படுகிறான்.கேத்ரீனா நிரந்திற குற்றவுணர்வுக்கு ஆளாகிறாள்.சிறுவன் இல்யூஷா இறந்துபோகிறான்.அல்யோஷாவால் ஏதுவும் நிகழாமல் தடுக்கவோ, அல்லது நிகழ்த்தவோ முடியவில்லை.ஆனால் அவன் முன் அனைவரையும் தங்களை அம்மனமாக்கி கொள்கின்றனர்.ராத்திகனிடம் அல்யோஷாவை எப்படியாவது அழைத்துவர சொல்லும் குருஷன்கா அவன் வந்தபின் கிட்டத்தட்ட அவனிடம் சரனாகதி என்பது போல ஆகிறாள்.அவன் மானுட அறத்தின் குறியீடு போல இருக்கிறான்.லெளகீகமாக அவன் ஒரு செல்லாக் காசு.இவானால் அல்யோஷாவின் இருப்பை பொறுத்துக்கொள்ள முடிவதேயில்லை.திமித்ரி சிறையில் அல்யோஷாவிடம் பேசும்போது வாழ்க்கை எல்லா இடங்களிலும் வாழ்க்கையே.அங்கும் என்னை சுற்றி மனிதர்கள் இருப்பார்கள் என்கிறான்.அவனது தந்தை திமித்ரியை விடவும் இவானை கண்டே தான் அஞ்சுவதாக கூறுகிறார்.ஆனால் அவன் அவர்களுக்காக ஆறுதலாகவோ, லெளகீகமான சில யோசனைகளையோ கூற முடியவதில்லை.மாறாக அவன் தோளில் சாய்ந்து எல்லோரும் மனம் உருகி அழுகிறார்கள்.மானுடர்கள் எல்லோரும் தங்கள் கீழ்மையையும், தீமையும் அவன் முன் திறந்து வைத்து அவன் முன்னால் மானுட மேண்மையை நோக்கி முன் செல்கிறார்கள்.அவனே தஸ்தாவெய்ஸ்கியின் கிறுஸ்து.


No comments: