இந்தியாவின் தொழில்மயம் - 3





எனினும் , மற்றொரு மாற்றம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. தொழில்மயமும் தொழில் நுட்பத்திற்கான அறிமுகமும் பின்தங்கிய நாடுகளின் பாரம்பரிய வாழ்க்கை மற்றும் உழைப்பு முறையால் தீவிர எதிர்ப்பை சந்திக்குமென்றால் , அந்த எதிர்ப்பு எளிதானதும் சிறந்ததுமான வாழ்க்கை உருவாகுமென்ற தெளிவான வாய்ப்பு உள்ள நிலையிலும் கைவிடப்படாதென்றால் இந்த தொழில்நுட்பத்திற்கு முந்தைய பாரம்பரியமே வளர்ச்சிக்கும் தொழில்நுட்பத்திற்குமான ஆதாரமாக அமையக்கூடாதா?

பின்தங்கிய நாடுகளில் உள்ளவர்களை மனித இருப்புக்கான வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்க இயலாத வகையில் செய்யும் அடக்குமுறை மற்றும் சுரண்டல் சக்திகளை(பொருள் மற்றும் சமயம்) அகற்றி பாரம்பரிய வாழ்க்கை மற்றும் உழைப்பு முறைகளுக்கு மேல் தொழில்நுட்பத்தை திணிக்காது அவைகளின் சொந்த தளத்தில் முன்னேறவும் நீட்டித்துகொள்ளவும் கூடிய வகையில் அமைய இந்த சுயமான வளர்ச்சி ஒரு திட்டமிட்ட கொள்கையை கோருகின்றது. சமூக புரட்சி, வேளாண்மை சீர்திருத்தம் மற்றும் மக்கள் தொகையை கட்டுபடுத்துதல் இவற்றின் முன்-தேவைகள்.ஆனால் தொழில்மயம் முன்னேறிய சமூகங்களின் பாங்கில் இருக்க கூடாது.இயற்கை வளங்கள் அடக்குமுறை ஆக்கிரம்பிப்புகளிலிருந்து நீக்கப்படுமானால் சுயமான வளர்ச்சி இத்தகைய பகுதிகளில் உண்மையிலேயே சாத்தியம் என்று தான் தோன்றுகிறது.அப்படியாக அவை ஒரு பிழைப்புபாக மட்டும் அல்லாமல் மனித வாழ்வை அளிக்ககூடியதாகவும் இருக்கும்.அத்தகைய இயற்கை வளங்கள் இல்லாத இடங்களில் , சிறிது சிறிதான தொழில்நுட்ப உதவியால் பாரம்பரிய வடிவத்துக்குள் இருந்துகொண்டே சீராக அதை போதுமானதாக சாத்தியப்படுத்த முடியாதா?

(தொடரும்)

-- Herbert Marcuse - One Dimensional Man - Beacon Press - 1971

படம் - சூரிய சக்தியை முன்னிறுத்தி பேசிய பண்முக ஆளுமை கோசாம்பி

இந்தியாவின் தொழில்மயம் - 2

இந்தியாவின் தொழில்மயம் - 1




No comments: