வரலாறு


சமூகம் என்பது மேற்கட்டுமானம் மற்றும் அடித்தளத்தால் ஆனது. அடித்தளம் என்பது உற்பத்தி உறவுகளாலும் உற்பத்தி முறைகளாலும் ஆனது. மேற்கட்டுமானம் என்பது இந்த உற்பத்தி உறவுகளை , உற்பத்தி முறைகளுக்கான கருத்துதளம். உற்பத்தி உறவுகளிலும் உற்பத்தி முறைகளிலும் மாற்றம் வருவதும் அவைகள் நீட்டிப்பதற்கான கருத்துதளத்தை இது உருவாக்கும்.

ஆகையால் அதன் பாதிப்புகள் அடித்தளத்தில் ஏற்படும்.அதே நேரத்தில் அடித்தளம் மேற்கட்டுமானத்தை மாற்றிப்போடும். இது ஒரு முரணியக்கம்.இதில் மேற்கட்டுமானத்தை விட அடித்தளத்தில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை கொண்டுவந்தால் அதுவே மேற்கட்டுமானத்தை புரட்டிப்போடும். முரணியக்க பொருள்முதல்வாதம் என்கிறது மார்க்சியம்.பின்னாட்களில் வந்த அன்டோனியோ கிராம்சி என்ற இத்தாலிய மார்க்சியர் அடித்தளம் மேற்கட்டுமானத்தை எந்தளவு பாதிக்கறதோ அந்த அளவு சொல்லப்போனால் இன்னும் அதிகமாக மேற்கட்டுமானம் அடித்தளத்தை பாதிக்கிறது என்றார்.


கோசாம்பி இந்தியாவின் வரலாற்றை பற்றி எழுதும் போது அது மன்னர்களின் காலத்தை பிரிப்பது அல்ல மாறாக உற்பத்தி உறவுகள் மற்றும் உற்பத்தி முறைகளிலான மாற்றத்தின் வரலாறே என்கிறார். அந்த கருவியை இந்திய வரலாற்றின் மீது செலுத்தி தன் ஆய்வை மேற்கொண்டார்.அதே போல மேற்கட்டுமானத்தை பற்றியும் பேசலாம். உதாரணமாக விஞ்ஞானத்தை பற்றி என்றால் நீயூட்டனால் நவீன பெளதிகம் தோன்றியது என்றோ ஜன்ஸ்டீனால் சார்பியல் தத்துவம் உருவானது என்று சொல்லாம். ஆனால் அது உண்மையல்ல.

இவை எப்படி ராஜராஜன் காலம் , அக்பர் காலம் என்று பிரிக்கிறோமா அது போலதான். மாறாக கருத்துதளத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்துவம் , விஞ்ஞானம் , மொழியியல் , பொருளாதாரம்.இலக்கியம் , கலை என்ற பல்வேறு கருத்துதளங்ளுக்கு உள்ளீடாக உரையாடல் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. Positive Unconsiousness என்கிறார் ஃபூக்கோ. இந்த உரையாடல்களின் விளைவே புதிய திறப்புகள்.நீயூட்டனும் , ஜன்ஸ்டீனும் நாம் அறிந்த முகங்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் சார்பியல் தத்துவத்தை முன்னான பல்வேறு கேள்விகள் உள்ளன. ஆக அறிவுதுறைகளின் வராலாற்றை முன்வைத்துதான் எல்லா விமர்சனங்களும் பேசப்பட வேண்டும். இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதனால் ஏற்பட்ட நுகர்வோர் சமூகம் இதை பற்றியெல்லாம் நாம் பேசவேண்டுமென்றால் நாம் விட்கென்ஸ்டீன் முன்வைத்த தத்துவத்தை குறித்து பேசியாக வேண்டும். ஒரு இலக்கிய ஆக்கத்தை பற்றி நாம் விமர்சனம் செய்கிறோம் என்றால் அந்த காலகட்டத்தின் தத்துவம் ,விஞ்ஞானம் , பொருளாதாரம் போன்றவற்றை ஆராய்ந்து தான் பேசமுடியும்.எப்படி அடித்தளம் என்பது உற்பத்தி உறவுகள் உற்பத்தி முறைகள் பற்றிய வரலாறோ அதுபோல மேற்கட்டுமானம் இந்த அறிவுதுறைகளின் வரலாறே.Transcendental consiousness என்றும் ஆழ்மன உள்ளுணர்வு சார்ந்த அவதானிப்பு அல்லது திறப்பு என்பது போன்ற தனிநபர் வழிபாடுகளை கருவிகளாக பயன்படுத்துவது பெரிய அளவில் பயன் தர வாய்ப்பில்லை. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் இன்று மனிதன் இயற்கையை அழிக்கிறான்.மனிதனும் இயற்கையே என்று அவன் கண்டுகொள்ளும்போது அவன் இயற்கையோடு இயைதல் என்ற நிலைக்கு வருவான் என்கிற ரீதியில் நாம் பேசலாம்.ஆனால் இது சாத்தியமேயில்லை. மனிதன் X இயற்கை என்ற எதிர்வுகள் நம் மனங்களில் ஆழமாக இருக்கிறது. அதற்கான கருத்தியல் தளமே கடந்த ஐநூறு ஆண்டு மேற்கட்டுமானத்தின் வரலாறு. இந்த எதிர்வை நாம் உடைக்க வேண்டுமென்றால் அதற்கான தத்துவம் உருவாக வேண்டும்.அது விஞ்ஞானத்தோடு உரையாட வேண்டும். அது பொருளாதாரத்தோடு உரையாட வேண்டும்.ஃபூக்கோ சொல்வது போல இந்த எதிர்வுகளுக்கு எதிராக Positive unconsiousness உருவாக வேண்டும் . அதற்கு அறிவுத்துறைகளில் பெரும் பாய்ச்சல் வேண்டும்.அது ஒரு நீண்ட நாள் செயலாகத்தான் இருக்க முடியும்.


No comments: