குட்டிப்பெண்ணின் ஒற்றைச்செருப்பு








மின் இறக்கையில்
தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வது
நிறைய வலிக்கலாம் என்பதால்
தூக்க மாத்திரைகளை பற்றி தெரிந்துக்கொள்ள
கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன்.
சாப்ட்டு தண்ணீயே குடிக்கலேயே
என்று நீர்குவளையை நீட்டினாள் அம்மா.

கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு
நிற்கும் குழந்தையை போல
நின்றிருந்த இருசக்கர வாகணத்தை பார்த்தப்பின்னர்தான்
அன்று வெள்ளை சட்டையும் வேஷ்டியும் அணிந்துக்கொண்டு
கடற்கரை சென்றேன்.

என் அருகில் ஒரு குட்டிப்பெண்ணின்
ஒற்றை குட்டிச்செருப்பில் ரோஜா பூத்திருந்தது.

நான் படுத்துக்கிடக்கையில்
ஒரு பறவை தன் அலகால் என் குதத்தை
குத்திக்கொண்டிருந்தது.
வலி பொறுக்காமல் தூக்கம் கலைந்து
சட்டென்று திரும்பி நீர்க்காக்கையின் கழுத்தை பற்றி
நெருக்கினேன்.

அதன் இறகுகள் கத்தரிக்கப்பட்டியிருப்பதை
அப்போதுதான் கவனித்தேன்.
நான் இறுக்கம் தளர்த்திய அந்த நொடியில்
அது என் மடியில் படுத்துக்கொண்டது.
இப்போது
பறவைகளுக்கு எப்படி செயற்கை இறக்கைகளை
தயாரிக்கமுடியும் என்று கூகிளில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

No comments: