சுய மதிப்பீடு





ஜெயகாந்தனை பற்றி ரவி சுப்பரமணியன் எடுத்த எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் என்ற ஆவணப்படத்தில் உலகமயமாக்கல் குறித்த கேள்வி ஒன்றிற்கு அதன் நேர்மறையான அம்சங்களை பதிலாக சொல்வார்ெயகாந்தன்.ஆனால் அதனால் உருவாகும் வேறு பாதிப்புகளை பற்றிய அடுத்த கேள்விக்கு, I’m not a scientist, I’m not a ruler, I’m a dreamer என்று பதிலளிப்பார்.இந்த சமூகத்தில் தன்னுடைய பங்கு,வேலை என்ன என்பது குறித்த ஒரு தெளிவு அவரின் பதிலில் இருக்கிறது.அவருடைய இரண்டு கட்டுரை தொகுதிகளின் தலைப்புகள்ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவக் கட்டுரைகள்மற்றும்ஒரு இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்என்பதும்தான்.அவர் சினிமா எடுக்கும் போது, அரசியல் மேடைகளில் பேசும் போது, ஆன்மிக அனுபவங்களை சொல்லும் போதும் - தன்னை ஒரு இலக்கியவாதியாகத்தான் முன்வைக்கிறார்.அவர் எப்போதும் தன் வேலை குறித்த, தன் அடையாளம் குறித்த தன்னுணர்வுடன்  இருந்திருக்கிறார்.இது ஒருவர் தன்னை குறித்து சரியான சுய மதிப்பீடை செய்து கொள்வதால் உருவாவது.

ரஜினிகாந்த் உடல்நலம் குன்றி மீண்டுவந்து ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் இயக்குனர் அல்ல, எழுத்தாளன் அல்ல, நடிகன்.என் உடல்நலமும் வேகமும் குன்றிவிட்டால் தான் நடிப்பதில் பொருளில்லை என்றார்.அவருக்கு தன்னை குறித்த சரியான மதிப்பீடு இருக்கிறது.அவர் திரையில் தோன்றினாலே படம் வெற்றி அடைந்துவிடும் என்ற கற்பனைகள் சிறிதளவும் அவருக்கில்லை.

மகிழ்ச்சியாக இருப்பதற்கும் சுய திப்பீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.தன்னை சரியாக மதிப்பீட்டு கொள்ளத் தெரிந்தவர் தனக்கு தெரியாத ஒரு விஷயத்தை செய்வதில்லை.ஒரு தவறிழைத்து விட்டால் சட்டென்று அந்த குற்றவுணர்விலிருந்து தண்ணீர் மறுபடியும் தன்னிலையை அடைவது போல விடுபடுகிறார்.பெரும்பாலும் இத்தகையவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த தங்களால் செய்ய இயன்ற விஷயங்களை மட்டும்தான் செய்கிறார்கள்.இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.இவர்கள் சட்டென்று பாதை மாறி புதிதாக ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள்.தங்களுக்கு சம்மந்தமற்ற இடத்தில் தங்களை பொருத்திக் கொள்ளமாட்டார்கள்.அதனால் இவர்கள் அவமானப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதில்லை.

ஆனால் இதனால் இவர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை என்பதையும் பாரக்க வேண்டும்.தங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து செய்வதால் அவர்களின் துறைகளில் அநேகமாக வெற்றியும் பெறுகிறார்கள்.மாறாக தாழ்வான சுய மதிப்பீடு கொண்டவர்கள் தங்களால் எதை சரியாக செய்ய இயலும எதை செய்ய இயலாது என்பதில் குழப்பம் கொள்கிறார்கள்.அதனால் முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார்கள்.தவறான மதிப்பீட்டால் சமயங்களில் அவமானப்படுகிறார்கள்.தாழ்வான சுய மதிப்பீடு கொண்டவர்கள் அவமானப்படும் போது பயங்கரமாக புண்படுகிறார்கள்.பிறருடன் எப்போது தங்களை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்.சின்ன சின்ன அவமானங்கள் கூட அவர்களை பெரிய அளவில் பாதிக்கிறது.எப்போதும் பிறரின் மதிப்பீட்டை எதிர்பார்ப்பதால் உருவாகும் அவஸ்தை இது.அதே போல ஒரு சின்ன குற்றத்திற்கு கூட அதிக குற்றவுணர்வு கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் இவர்கள் சுவர்கள் போல இறுக்கமாக மாறி விடுகிறார்கள்.உடைந்தால் அவ்வளவுதான்.மீண்டெழுவது பெரிய விஷயமாகிறது.முக்கியமாக இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.

தாழ்வான சுய மதிப்பீட்டிற்கும் - பயம், வெட்கம், மனச்சோர்வு, ஏக்கம் மற்றும் சஞ்சலம்,தாழ்வு மனப்பான்மை ஆகிய மனநிலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.ஒரு செயல் குழப்பமான மதிப்பீட்டுடன் செய்யப்படும் போது அதன் விளைவுகளும் குழப்பங்களை உருவாக்குகிறது.தன்னைப் பற்றிய சரியான மதிப்பீடு இல்லாததால் அவர்களால் வேறு எதையும் சரியாக மதிப்பீடு செய்ய முடிவதில்லை.ஆனால் தாழ்வான சுய மதிப்பீடு உள்ளவர்களுக்கு எப்போதும் நல்லூழ் ஒன்று உண்டு.அவர்களால் தங்களை சரியாக கணிக்க முடியாததால் புதிதான ஒன்றை தங்களுக்கு சற்றும் தெரியாத ஒன்றை செய்துவிடுகிறார்கள்.அது வெற்றி அடையும் போது , மகிழ்ச்சியை அளிக்கும் போது தங்களால் அதை செய்ய இயலும் என்பதை அறியும் போது , அவர்களின் வாழ்வில் முதல் முறையாக வசந்தம் சாத்தியப்படுகிறது.புதிய பயணம் உருவாகுகிறது.மற்றொரு விஷயம் அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.அதனால் இத்தகையவர்களே கலைஞர்கள் ஆகிறார்கள்.விதிவிலக்குகள் இருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்து உயர் சுய மதிப்பீடு கொண்டு கலைஞராக இருக்கும் ஒரே எழுத்தாளர் ஜெயமோகன் மட்டும்தான்!! உயர் மதிப்பீடு கொண்டவர்கள் செயல்பாட்டாளர்களாகவும்,தாழ்வு மதிப்பீடு கொண்டவர்கள் கலைஞர்கள் ஆவதும் தான் இயற்கை.ஏனேனில் உயர் மதிப்பீடு கொண்டவர்களுக்கு இயல்பாகவே தங்கள் முடிவுகளின் மேல் பிடிவாதம் இருக்கிறது.

ஆனால் அதீத உயர் மதிப்பீடு கொண்டவர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. அவர்கள் தங்களை தாக்குபவர்களை மிகத் தீவிரமாக திருப்பி புண்படுத்துகிறார்கள்.ஜெயமோகனிடம் இதைப் பார்க்கலாம்.ஒரு முறை வண்ணநிலவன் சொல்வனத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயமோகன் எல்லாவற்றையும் கதையாக்கி விடுகிறார், உதாரணமாக நீங்கள் ஒரு செய்திதாளை கொடுத்தால் அதையும் கதையாக்கி விடுவார் என்று சொல்லியிருந்தார்.அடுத்த சில நாட்களில் ஒரு கட்டுரையில் ஜெயமோகன் - கடல்புரத்தில் நாவல் ஆண் பெண் சல்லாபத்தை பற்றிய எளிய நாவல் என்று எழுதியிருந்தார்.அந்த நாவல் மரபான உற்பத்தி முறை இருக்கும் போது தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய உற்பத்தி முறை மனித உறவுகளுக்கு மத்தியில் உருவாக்கும் நெருக்கடியை பேசும் நாவல்.சுமாரான வாசிப்புப் பழக்கம் உள்ளவர் கூட அதை உணரலாம்.ஜெயமோகன் அதை நன்கு அறிவார்.ஆனால் அந்த நேரத்தில் அவர் வண்ணநிலவனை பற்றி அப்படி எழுதியாக வேண்டிய தளத்திற்கு சென்று சேர்கிறார்.அது அதீத உயர் மதிப்பீட்டால் உருவாகும் பிரச்சனையும் கூட.

கலைத்துறையை அல்லது விஞ்ஞானத்துறையை சாராத ஒருவர் தாழ்வு மதிப்பீடு கொண்டவராக இருந்தால் அது அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கும்.ைத்துறயினருக்கும் விஞ்ஞானிகளுக்கும் மாறாக அது பயன் அளிக்கிறது.ஏனேனில் அவர்கள் தாழ்வு மதிப்பீடால் தாங்கள் செய்வதை மிக் சரியாக செய்ய முனைகிறார்கள்.பிறர் முதலில் தங்களுக்கு அப்படியான ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.ஒரளவுக்கு சுய பரிசீலனை செய்ய முடிந்தால் அதைக் கண்டுபிடித்து விடலாம்.பிறகு அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து ஆராயலாம்.

தாழ்வான சுய மதிப்பீடு உருவாவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.பால்ய காலத்தில் உருவாகும் தனிமை, பாலியல் சிக்கல்கள், அடையாள சிக்கல்கள்,கொடூரமான அவமானம், இவைகள் முக்கியமானவை.எல்லாவற்றையும் விட ஒருவரின் இயல்பான குணம்.ஒரே போன்ற அனுபவங்களை கொள்ளும் இருவரில் ஒருவர் அதனால் புண்படுவதும் மற்றவர் அதை இயல்பான விஷயமாக பார்ப்பதற்கும் குணத்திலிருந்து வரும் சுய மதிப்பீடும் காரணம்.சமூக மதிப்பீட்டிற்கும் சுய மதிப்பீட்டிற்கும் கூட உறவு இருக்கிறது.சிலர் தங்களின் கிராம பெயரை குல தெய்வத்தின் பெயரை சொல்வதற்கு வெடகப்படுவதை பார்த்திருக்கிறேன்.இந்த தாழ்வு ப்பான்மை தன்னை குறித்து பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலிருந்து உருவாவது.தன்னை தாழ்வாகவும் பிறரை உயர்வாகவும் கருதும் எண்ணம் இதிலிருக்கிறது.தாழ்வு மதிப்பீட்டின் முக்கியமான பிரச்சனை தனக்கு எதையும் சரியாக செய்யத் தெரியாது என்ற எண்ணம்தான்.நகரத்து மனிதர்கள் விஷயம் அறிந்தவர்கள், கிராமத்தவர்கள் விஷயம் அறியாதவர்கள் என்ற சமூக மதிப்பீடு ஒருவர் தன்னைப்பற்றி கொள்ளும் தாழ்வு மதிப்பீடாக உருமாறலாம்.இங்கு தாழ்வின் காரணம் நகரம் X கிராமம் என்ற எதிரடைவுகள்தான்.சமூகத்தின் வரலாற்று போக்கை புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இந்த தாழ்வு மதிப்பீடும் அதனாலான தாழ்வு ப்பான்மையும் விலகலாம்.ந்த மதிப்பீடுகள் பல்வேறு அடுக்குகளை கொண்ட மனம் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கல்.ஆனால் ஒருவர் அதை உணரும் போதே பாதி சிக்கலை கடந்துவிடுகிறார்.அதன் பின் அவர் செய்ய வேண்டியது சுய பரிசீலனை.பிறகு ஆலோசனைகளும் புத்தகங்களும் உதவலாம்.ஒரு நல்ல வெற்றி அவருக்கு தன்னை குறித்த நம்பிக்கையை அளிக்கலாம். மேலே சொன்னது போல குணம் கூட முக்கிய காரணம்தான். ஆனால் தன்னுணர்வுதான் இந்த சிக்கலிலிருந்து விடுபட முதல் படி.

No comments: