இனிய நாள்


நண்பர் ஒருவர் நம் அலுவலகத்தில் யார் அழகான பெண் என்றார்.எல்லா பெண்களும் அழகாகத்தானே இருக்கிறார்கள் என்றேன்.அழகற்ற பெண்னை காண்பது அரிது.ஒரு முறை நண்பன் ஒருவன் பெண்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.காதலிக்கும் போது நாம் பார்க்கும் பெண் , திருமணத்திற்கு பின் இருப்பதில்லை.அவள் அண்னையாகும் போது முற்றிலும் வேறு ஒரு பெண்ணாகிவிடுகிறாள்.மாமியாராகும் போது அவள் யாரோ.நாம் அப்படியில்லை.நாம் எப்போதும் ஒரே போலத்தான் இருக்கிறோம் என்றான்.எனக்கு பொதுவாக பெண்களை புரிந்து கொள்ளவே முயலவே கூடாது என்று தோன்றுகிறது.ஏனேனில் அது சாத்தியமில்லை.சிந்திக்கும் முறை , ஒரு விஷயத்தை பொருள் கொள்ளும் முறை, அன்பை வெளிப்படுத்துவது , சினம் கொள்வது என்று எல்லாமே பெண்களின் உலகம் வேறாக இருக்கிறது.

பெண்களை போல குரூரமாக பழிவாங்கும் ஆற்றல் ஆண்களுக்கு குறைவு என்று தான் தோன்றுகிறது.அதே போல அவர்களை போல கருணையுடன் நடந்து கொள்வதும் ஆண்களுக்கு சாத்தியமில்லை.அவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் குறிப்பிட்ட விதமாக நடந்துகொள்கிறார்கள் என்பது இரவில் இருளில் வெளிச்சத்திற்கான சாத்தியமின்றி இருப்பது போலத்தான்.ஒன்றும் செய்ய முடியாது.அப்படியே விட்டுவிட வேண்டும்.என் நண்பர் ஒருவர் சொன்னது போல ஆண்களும் பெண்களும் வேறு வேறு உயிரனங்களாக கூட இருக்கலாம்.அன்று தன்னை கடந்தவன் தன்னை பார்த்து புன்னகைக்கவில்லை என்பதால் ஒரு பெண் நாள் முழுதும் மன அழுத்தம் கொள்ளலாம்.அது அவளது அன்றைய செய்கைகளில் முழுக்க வெளிப்படலாம்.அவள் அன்று முழுதும் தான் எதிர்கொள்பவர்களிடம் எரிச்சல் கொள்ளலாம்.வேறு ஒரு நாளில் அவளே மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கலாம்.அவள் எப்போது எப்படி நடந்து கொள்வாள் என்று அறிந்து கொள்ள ஆசைப்படுவது வானம் வசப்படும் என்று சொல்வது போலத்தான்.அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டால் வாழ்க்கை இனிதாகிறது.அன்றைய நாள் உங்கள் காதலியோ , மனைவியோ , மகளோ உங்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்றால் அன்று உங்களுக்கு இனிய நாள் அவ்வளவுதான்.அதில் உங்கள் பங்கு என்று ஒன்றும் இல்லை.அவர்கள் சினத்துடன் உங்களை குரூரமாக குத்தினாலும் நீங்கள் செய்ய ஒன்றும் இல்லை.நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் நடப்பதுதான் நடக்கும்.அதனால் தேமே என்று இருப்பது நலம்.

ஒரு ஆணின் காமம் பெண் உடலிலோ அல்லது கோட்பாட்டாளர்கள் சொல்வது போல காட்சி பிம்பங்களிலோ இல்லை.அது அவனுடைய அகங்காரத்தில் இருக்கிறது.தன் அகங்காரத்தை வென்றவன் காமத்தை கடக்கிறான்.அகங்காரம் அற்றவன் காமம் கொள்வது சாத்தியமற்றது.ஆனால் பெண்களை புரிந்து கொள்வது சாத்தியமில்லை என்பதே ஆண்களுக்கு பெண் மீதிருக்கும் ஈர்ப்பாக இருக்கிறது.

No comments: