டூலெட்




செழியனின் டூலெட் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்று வருகிறது.விரைவில் தியேட்டர்களுக்கு வரும் என்று நினைக்கிறேன்.செழியன் பாலாவின் பரதேசி படத்திலும் தாரை தப்பட்டையிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.

ரவி சுப்பிரமணியன் இயக்கிய ஜெயகாந்தன் பற்றிய எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன்.தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக எப்போதும் அது இருக்கும்.விகடனில் உலக சினிமா கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.இசைப்பள்ளி ஒன்று நடத்துகிறார் என்று நினைக்கிறேன்.மேற்கத்திய இசை பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.தீவிர வாசகர்.பன்முக ஆளுமை.தன் பணிகளை தொடர்ந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தீவிரமாக செய்து வருகிறார்.பி.சி.ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு கற்றவர்.

கவிஞர் விக்ரமாதித்தியன் நம்பியின் மகனும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் நம்பிராஜனும் ஷீலா ராஜ்குமாரும் மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.ராஜ்குமார் தம்பிச்சோழனின் இயற்பெயர்.தம்பி என்று அழைக்கப்படுவதை தவிர்க்க தம்பிசோழனை சோழன் என்று மாற்றிவிட்டார் என்று நினைக்கிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


No comments: